தெலங்கானாவில் நோய் தாக்கிய நபர் பெங்களூரில் இருந்து பயணித்து சென்றதாகத் தெரியவந்ததை அடுத்து அவருடன் பஸ்ஸில் பயணித்தவர்கள் யார்

தெலங்கானாவில் நோய் தாக்கிய நபர் பெங்களூரில் இருந்து பயணித்து சென்றதாகத் தெரியவந்ததை அடுத்து அவருடன் பஸ்ஸில் பயணித்தவர்கள் யார் யார் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் தங்கள் இல்லங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


இதனிடையே உ.பி.யில் கொரோனா தொற்றியிருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் 6 நோயாளிகள் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


தெற்கு டெல்லியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த 21 இத்தாலி பயணிகள் மற்றும் 3 இந்தியர்கள் இந்தோ- திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் நாளை தெரியும் என்று அரசுத் தரப்புத் தகவல்கள் கூறுவதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.