தி ஹிந்து, ஆங்கில நாளேட்டின் பத்திரிகையாளர் செளரப் திரிவேதி திங்களன்று சம்பவம் நடந்த இடத்தில் இருந்தார். அவரிடம் பிபிசி இந்த வீடியோ குறித்து பேசியது. "நான் மெளஜ்பூரிலிருந்து பாபர்பூருக்கு சென்று கொண்டிருந்தேன். ஜாஃபராபாத் மற்றும் மெளஜ்பூரின் எல்லையின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாகனங்களில் தீ வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். கற்களையும் வீசிக் கொண்டிருந்தார்கள். இரு தரப்பிலிருந்தும் கூட்டம் வந்துக் கொண்டிருந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள் இருந்த இடத்தில் நான் இருந்தேன். எனக்கு எதிரே இருந்த கூட்டம் சி.ஏ.ஏ.வை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அவர்களில் ஒருவர் முன்னால் வந்தார். அவரது கையில் ஒரு கைத்துப்பாக்கி இருந்த்து. அவருக்கு பின்னால் இருந்த கூட்டம் கல்லெறிந்து கொண்டிருந்தது. அவர் முதலில் போலீசரிடம் துப்பாக்கியைக் காட்டி, அங்கிருந்து ஓடுமாறு எச்சரித்தார். ஆனால் போலீஸ்காரர் நின்றார். அதன் பிறகு அந்த இளைஞர் சுமார் எட்டு முறை சுட்டார்.
"எனக்குப் பின்னால் இருந்த கூட்டம் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை எழுப்பிக் கொண்டிருந்தது" என்று செளரப் சொல்கிறார். அதாவது, இரு தரப்பினருக்கும் நடுவில் ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். துப்பாக்கியால் சுட்ட இளைஞன் CAAவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தான்.''