வீடியோவில், ஒரு நபர் பகல் நேரத்தில் போலீஸ்காரர் மீது துப்பாக்கியால் சுடுகிறார். இந்த இளைஞனின் பின்னால் கற்களை வீசும் ஒரு கூட்டம் இருக்கிறது. சிவப்பு சட்டை அணிந்த இந்த இளைஞன், போலீஸ்காரரை நோக்கி கைத்துப்பாக்கியைக் காட்டியவாறே முன்னேறிச் செல்கிறான். கூட்டமும் அந்த இளைஞனுடன் முன்னோக்கி நகர்கிறது, துப்பாக்கியால் சுடும் ஓசை ஒலிக்கிறது.
இந்த வீடியோவை ட்வீட் செய்துள்ள த ஹிந்து பத்திரிகையாளர் செளரப் திரிவேதி, "ஒரு சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் ஜாஃப்ராபாத்தில் துப்பாக்கியால் சுடுகிறார். இந்த நபர் போலீஸ்காரரை நோக்கி துப்பாக்கியை நீட்டுகிறார். ஆனால் போலீஸ்காரர் உறுதியாக நின்றார்" என்று தெரிவித்துள்ளார்.